அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! வவுனியா கொந்தகாரன்குளம் முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்!
வவுனியா ஓமந்தை மருதமடு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட கொந்தகாரன்குளத்தில் PSDG-2019 திட்டத்தின்
கீழ் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள முன்பள்ளி கட்டிடத்திற்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 07.10.2019 திங்கட்கிழமையன்று இடம்பெற்றது.
கொந்தகாரன்குளம் அ.த.க.பாடசாலையின்
அதிபர் திரு.ந.நவரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு.ஞானமுத்து
அகிலன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதி பிரதம செயலாளர் அலுவலகம்-திட்டமிடல்
வடமாகாணம்) கலந்துகொண்டு அடிக்கல்லினை
நாட்டி வைத்தார். மேற்படி நிகழ்வில் மருதமடு கிராம அபிவிருத்திச்
சங்கத்தின் தலைவர், முன்பள்ளியின் ஆசிரியை,தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், மற்றும்
கிராம மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக